Powered By Blogger

புதன், 7 மே, 2014

உலக ஆஸ்துமா விழிப்புணர்வு தினம்,         மே 7.


உலக ஆஸ்துமா தினம் மே 7-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உங்கள் ஆஸ்துமாவை நீங்களே கட்டுபடுத்தலாம் என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஆகும்.
இந்தியாவில் 10 முதல் 15 சதவீத குழந்தைகளுக்கு ஆஸ்துமா அறிகுறிகள் உள்ளன. ஆஸ்துமா நோய்க்கு முற்றிலும் தீர்வு இல்லாவிட்டாலும் அதை கட்டுப்படுத்த முடியும்.
ஆஸ்துமா நோயை எந்த ஒரு ரத்த பரிசோதனை மூலம் கண்டறிவது கடினம். முழு நேர்முக பரிசோதனை மற்றும் ஸ்பைரோமெட்ரியால் ஆஸ்துமாவை கண்டறியலாம். ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் முறைகளை அறிந்திருக்க வேண்டும்.

ஆஸ்துமாவை கட்டுபடுத்த கையாள வேண்டிய வழிமுறைகள்:  

  • நாம் வாழும் சுற்றுப்புறம் தூய்மையக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • தியானம் 
  • சத்தான சரிவிகித உணவுப் பழக்கம் 
  • குழப்பமான மனநிலை தவிர்த்தல் 
  • முறையான உறக்கம்

குழந்தை பருவத்தில் ஏற்படக்கூடிய ஆஸ்துமா நோய்:


              குழந்தை பருவத்தில் ஏற்படக்கூடிய ஆஸ்துமா நோய் பரம்பரை நோயல்ல. அதிகபட்சமாக குழந்தை பருவ ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது. பூக்களின் மகரந்த தூள்கள், வீட்டுத்தூசு, மிருகக்கழிவு, போன்றவற்றால் இது ஏற்படுகிறது. இயல்பான ஆஸ்துமா மூன்று வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவை இயல்பான ஆஸ்துமா என்று குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
          நோயெதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளை இந்த ஆஸ்துமா தாக்குகிறது. குளிர்காற்று, வீரியம் மிக்க வாசனை, புகை போன்றவற்றாலும் வைரஸ் நுண்கிருமிகள் மூலம் ஏற்படும் தொற்று நோயாலும் ஏற்படக்கூடும். சில குழந்தைகளுக்கு மூன்று வயதிற்குப் பிறகே ' வீசிங்" என்னும் மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்குகிறது. இது சாதாரணமாக 8 வயதிற்கு முன்பாக குணமாகிவிடும். லேசான விட்டு விட்டு ஏற்படும் ஆஸ்துமா வருடத்திற்கு 3 அல்லது 4 முறை ஏற்படும். 10 முதல் 12 வயதிற்குள் சரியாகிவிடும். 
              நடுத்தர கடுமையான ஆஸ்துமாவில் குழந்தைகளுக்கு நோயின் அறிகுறிகள் 2 வயதிற்கு முன்னரே ஆரம்பிக்கும்.நோயின் கடுமை அதிகாமாகவும், நீடித்தும் இருக்கும். இந்நோய் முழுமையாக குணமடையாது பிற்காலத்திலும் நீடிக்கும். சுத்தமான சூழல் குழந்தைகளின் படுக்கை அறையினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மெல்லியதாக இருந்தால் அதை அடிக்கடி சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். திரைச் சீலைகளுக்கு மெல்லிய துணிகளே நல்லது. ஏனெனில் மொத்தமான வேலைப்பாடுடன் இருக்கும் துணிகளில் தூசி அதிகமாய் படியும் என்பதால் அதுவே குழந்தைகளை பாதிக்கும். குழந்தைகளின் படுக்கை அறையில் உள்ள புத்தகங்கள், சுவர்களில் தொங்கும் படங்களில் தூசிகள் தங்கியிருக்க வாய்ப்புண்டு. எனவே அவற்றை ஈரமான துணி கொண்டு துடைப்பது நல்லது. வீட்டில் நாய், பூனைகள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றின் ரோமங்களினால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்பவர்கள் அருகில் போக அனுமதிக்க கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 
                    சத்தான உணவு குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிக்கவேண்டும். அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பிட்ட உணவினால் அலர்ஜி ஏற்படுகிறது என்று தெரிந்தால் அவற்றை தவிர்க்கலாம் என்கின்றனர் குழந்தை மருத்துவ நிபுணர்கள். ஆஸ்துமாவை எளிதில் குணப்படுத்தி விடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூச்சுப்பயிற்சி போன்றவற்றை சிறு வயது முதலே பழக்கப்படுத்தினால் ஆஸ்துமா நோயை தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மனோ தத்துவ முறைப்படி அளிக்கப்படும் சிகிச்சையும் பலன் அளிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீச்சல் அடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வராது:



   

   பொதுவாகவே நீச்சல் பயிற்சி உடலுக்கு நன்மை பயக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  

இந்த நிலையில் நீச்சல் அடிக்கும் குழந்தைகளை ஆஸ்துமா நோய் தாக்காது என்று தகவல் தெரிவிக்கிறது.

தாஸ்மானியா பல்கலைக் கழகத்தின் 'பிரீத்வெல் சென்டர்' நிபுணர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற் கொண்டனர்.அதன்படி தண்ணீரில் நீச்சல் அடிப்பதன் மூலம் உடல் நலம் மற்றும் இருதய துடிப்பு சீராகிறது. அதனால் நுரையீரலின் செயல்பாடுகளும் நல்ல நிலையில் வைக்கப்படுகிறது. இதனால் 'ஆஸ்துமா' நோய் வராமல் தடுக்கப்படுகிறது. அல்லது அந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. 

குறிப்பாக, நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் குழந்தைகள் ஆஸ்துமாநோய் 

தாக்குதலில் இருந்து தடுக்கப்படுகின்றனர்.
 என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.



அம்மா இங்கே வா ... வா ...!

சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி முதல் வாரம்.